Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குழந்தை சாலை ஓரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

குழந்தை சாலை ஓரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

Share:

புதியதாக பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் சிசு ஒன்று, சிலாங்கூர், காஜாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 7.07 மணியளவில் அந்த சிசு எவ்வித ஆடையுமின்றி கிடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு 51 வயதுடைய ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த சிசு சிகிச்சைக்காக Serdang மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக எசிபி முகமட் ஸாயிட் ஹசான்குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News