புதியதாக பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் சிசு ஒன்று, சிலாங்கூர், காஜாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.07 மணியளவில் அந்த சிசு எவ்வித ஆடையுமின்றி கிடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு 51 வயதுடைய ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த சிசு சிகிச்சைக்காக Serdang மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக எசிபி முகமட் ஸாயிட் ஹசான்குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


