புதியதாக பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் சிசு ஒன்று, சிலாங்கூர், காஜாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.07 மணியளவில் அந்த சிசு எவ்வித ஆடையுமின்றி கிடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு 51 வயதுடைய ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த சிசு சிகிச்சைக்காக Serdang மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக எசிபி முகமட் ஸாயிட் ஹசான்குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


