May 3, 2026
Thisaigal NewsYouTube
புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு
தற்போதைய செய்திகள்

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

Share:

ஸ்ரீ கெம்பாங்கான், புஞ்சாக் ஜலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இன்று அதிகாலை 3.48 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்தத் தீயை அணைக்க, மலைப்பாங்கான நிலப்பரப்பும் பலத்த காற்றும் பெரும் சவாலாக இருந்ததாகத் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் நிக் முகமட் ஜாரின் கபாஸ்ரி அஸ்மி தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் இருக்கக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News