ஸ்ரீ கெம்பாங்கான், புஞ்சாக் ஜலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இன்று அதிகாலை 3.48 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்தத் தீயை அணைக்க, மலைப்பாங்கான நிலப்பரப்பும் பலத்த காற்றும் பெரும் சவாலாக இருந்ததாகத் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் நிக் முகமட் ஜாரின் கபாஸ்ரி அஸ்மி தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் இருக்கக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி


