Mar 11, 2026
Thisaigal NewsYouTube
டோட்ஜ்பால் பயிற்றுநர் மீது குற்றசாட்டு
தற்போதைய செய்திகள்

டோட்ஜ்பால் பயிற்றுநர் மீது குற்றசாட்டு

Share:

இரண்டு மாணவர்களிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக டோட்ஜ்பால் பயிற்றுநர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார். 53 வயது டெரென்ஸெ இ சூன் என்ற அந்த டோட்ஜ்பால் பயிற்றுநர், மாஜிஸ்திரேட் சஃப்ரான் ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த பயிற்றுநர் குச்சி ஒன்றை பயன்படுத்தி, 11 வயது மதிக்கத்தக்க இரு மாணவர்களுக்கு எதிராக இந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பள்ளி ஒன்றின் மண்டபத்தில் அந்த டோட்ஜ்பால் பயிற்றுநர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த பயிற்றுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து