கோலாலம்பூர், ஜூலை.19-
கோலாலம்பூர் புடு, Fraser Business Park பகுதியில் குடிநுழைவுத்துறை நடத்திய “Ops Gegar” அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் பாலியல் சேவை வழங்குவதில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில் இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் 203 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
அவர்களில், 17 பேர் கைது செய்யப்பட்டதுடன், ஒருவரின் கைப்பேசியில் பாலியல் சேவைகளுக்காக பெண்களை வழங்கும் பட்டியல், பணப் பரிவர்த்தனை தகவல்கள் மற்றும் உரையாடல்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.








