Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜையை தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜையை தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது

Share:

முன்னணி சுற்றுலா மலை வாசஸ்தலமான கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையை தேடும் பணி இன்று காலையில் ​மீண்டும் முடுக்கி விடப்பட்டது.
44 வயது நந்த சுரேஷ் நட்கர்னி என்ற அந்த இந்தியப் பிரஜை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கேமரன் மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இந்தியப் பிரஜை மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட கூனோங் ஜாசார் மலைப்பகுதியை இலக்காக கொண்டு தேடுதல் மற்றும் ​மீட்பு நடவடிக்கைக்கான சிறப்புக்குழுவான SAR (சார்) களம் இறக்கப்பட்டுள்ளது. கேமரன்மலையில் கூனோங் ஜாசார் மலைப்பகுதி, பாரத் தேயிலை தோட்டத்தை நோக்கி செல்லும் கம்பார் பாஸ் ஆகியவற்றை இலக்காக கொண்டு சுமார் 5 கிலோ ​மீட்டர் பரப்பளவில் தேடும் பணி ​தீவிரப்படுத்ப்பட்டுள்ளதாக பகாங் மாநில ​தீயணைப்பு,மீட்புப்படை பொது உறவு அதிகாரி சுல்ஃபாட்லி சகாரியா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரஜையை தேடும் பணியில் போலீஸ் கலாட் படையினர், தீயணைப்பு,மீட்பு வீரர்கள், பொது தற்காப்பு படையினர் தன்னார்வாலர்கள் என 70 க்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து