Aug 6, 2026
Thisaigal NewsYouTube
புஸ்பாகோமில் நடந்த ஊழல்: கைது எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

புஸ்பாகோமில் நடந்த ஊழல்: கைது எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது

Share:

ஜன.9-

கோலாலம்பூரில் உள்ள கணினி மய வாகனப் பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும் கனரக வாகனங்களை அங்கீகரிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 பேராக உயர்ந்துள்ளது.

அந்த மையத்தின் இயக்குநர் உட்பட ஆறு அதிகாரிகள் மற்றும் ஒரு ஏஜெண்டு ஆகியோர் ஏற்கனவே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆகக்கடைசியாக அந்த அரசாங்க ஏஜென்சியின் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்த மேலும் 13 அதிகாரிகளை SPRM கைது செய்துள்ளது. 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 13 அதிகாரிகளும் நேற்று புத்ராஜெயா, SPRM தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனரக வாகன பரிசோதனைக்கு உட்படும் ஒவ்வொரு வாகனத்தையும் அங்கீகரிப்பதில் ஒவ்வொருவரும் மாதத்திற்கு 150 ரிங்கிட் முதல் 1,500 ரிங்கிட் வரை லஞ்சம் வாங்கியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது