Jul 4, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பகாங் சுல்தான் உதவினார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பகாங் சுல்தான் உதவினார்

Share:

குவாந்தான், ஜூலை.26-

குவாந்தான், இஸ்தானா அப்துலாஸிஸ் முன்புறம் நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டி, தமது மனித நேயத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சுல்தான் உதவும் காட்சியைக் கொண்ட புகைப்படங்களை, பகாங் சுல்தான் தமது முகநூலில் பகிர்ந்துள்ளார். அரண்மனை முன்புறம் உள்ள பிரதான சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி, தூண் ஒன்றில் மோதி கீழே விழுந்து காயங்களுக்கு ஆளாகினார்.

இந்தச் சம்பவத்தை அரண்மனைக்கு வெளியே காரில் செல்லும் போது தற்செயலாகப் பார்த்த பகாங் சுல்தான், உடனே காரை நிறுத்தி விட்டு, அவ்விடத்திற்கு விரைந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு உதவியதுடன் அவசர சிகிச்கைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை சுல்தான் செய்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது