Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இயற்கை எய்தினார்
தற்போதைய செய்திகள்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இயற்கை எய்தினார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

பன்னாட்டு தமிழ் உறவு மன்றத்தின் உலகளாவியத் தலைவரும், பெரும்புலவருமான, மூத்த அறிஞருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், சென்னை மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார்.

அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பெருங்கவிக்கோ மறைவுக்கு மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தமது வீரவணக்கதைச் செலுத்தினார். அவருடைய மகன்களான கவிஞர் திருவள்ளுவர், பேராசிரியர் ஆண்டவருடன் தொடர்பு கொண்டு தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். அவர்- தமிழுக்கும் தமிழருக்கும் நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

50- க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ள- அவர்- 50- ஆண்டு காலமாக, "தமிழ்ப்பணி" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்துள்ளார். பெருங்கவிக்கோ நீண்டகாலமாக மலேசியத் தமிழர்களுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது