Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரைக் கடிதங்கள் மற்றும் உறவுமுறைகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் வழக்கத்தை பூமிபுத்ரா ஏஜென்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இத்தகைய தோழமைவாத முறைகேடுகளாலும், கடனைத் திருப்பிச் செலுத்தாததாலும் பல பூமிபுத்ரா ஏஜென்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார். வணிகத் தொடக்க நிதியைப் பெறும் சிலர், அதனைத் தொழிலில் முதலீடு செய்யாமல் ஆடம்பரக் கார்கள் மற்றும் அலுவலகங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.

அரசாங்கம் புதிய பூமிபுத்ரா ஏஜென்சிகளை உருவாக்காது என்றும், மாறாக மாரா, தேக்குன் நேஷனல், எஸ்எம்இ கார்ப்பரேஷன் போன்ற தற்போதைய ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களின் விகிதம் 5:1 என்ற கூற்று பொய்: நிர்வாகம் மறுப்பு

யுகேஎம் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மாணவர்களின் விகிதம் 5:1 என்ற கூற்று பொய்: நிர்வாகம் மறுப்பு