Apr 2, 2026
Thisaigal NewsYouTube
காராக் சாலை விபத்து: லோரி ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

காராக் சாலை விபத்து: லோரி ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

Share:

பெந்தோங், ஏப்ரல்.01-

கோாலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்துக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுநர், நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

52 வயதுடைய அந்த நபர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் காஹார் தெரிவித்தார்.

அந்த நபர், 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

அவர் ஏற்கனவே நான்கு குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஸைஹான் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 50.8 ஆவது கிலோ மீட்டரில் லோரி, ஹோண்டா அக்கோர்ட், புரோட்டோன் வாஜா, புரோட்டோன் சாகா மற்றும் சுபாரு ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஹோண்டா அக்கோர்ட் காரில் பயணம் செய்த 29, 34, 61 வயதுடைய மூவர் உயிரிழந்தனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்