Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

Share:

பேரா மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான முருகன் மாநாட்டை நடத்தவிருக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனின் முன்னெடுப்பை வரவேற்று, பாராட்டுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இன்று புந்தோங் சுங்கைபாரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் டத்தோ சிவநேசனுடன் இணைந்து கலந்து கொண்ட டத்தோஸ்ரீ சரவணன், மாநில அரசாங்கமே இந்த முருகன் மாநாட்டை ஏற்று நடத்துவது வரலாற்று சாதனையாகும் என்றார்.

சமய அறிவை இளையோர்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் ஆலயங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய டத்தோஸ்ரீ எம். சரவணன், இன்றைய நவீன சூழலில் இளைஞர்கள் ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிவிடாமல் இருக்க ஆலய நிர்வாகங்கள் சிறப்புப் பயிலரங்குகளையும் சமய வகுப்புகளையும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், பண்பாடும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு இளைய தலைமுறையினரிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஒரே வழி என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு