Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இடைநிலை பள்ளிக்கு மாற்றாக நற்சான்றிதழ் கல்வி மார்ச் 11 முதல் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

இடைநிலை பள்ளிக்கு மாற்றாக நற்சான்றிதழ் கல்வி மார்ச் 11 முதல் தொடக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 4 -

2023 ஆம் ஆண்டு இடைநிலை பள்ளிக்கு மாற்றாக நற்சான்றிதழ் கல்வி வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி முதல் சிறப்பு கல்வித் தேவைகள் ம்.பி.பி.கெ உள்ள மாணவர்களுக்கு வெளியிடப்படவுள்ளது.

காலை 10 மணி தொடங்கி மாணவர்கள் தங்களின் பள்ளியிலிருந்து அதனை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு ம்.பி.பி.கெ வின் இடைநிலை பள்ளிக்கான மாற்றாக கல்வி மதீப்பீடு ஜனவரி 19 ஆம் தேதி நிறைவடைந்ததாக கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்திருந்தது.

2023/2024 ஆம் ஆண்டிற்கான கல்வி நுழைவிற்கு நாடு முழுவதும் இருக்கின்ற 725 பள்ளிகளிலிருந்து மொத்தம் 3,210 ம்.பி.பி.கெ மாணவர்கள் பள்ளிப் படிப்பினை முடித்து குறிப்பிடப்பட்ட சான்றிதழ் பெற தகுதியடைந்திருப்பதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

2013 யிலிருந்து 2025 வரையிலான மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பதைப் போல மாணவர்களுக்கு சமநிலையில் கல்வி கிடைக்கபெறுவதுடன் அதன் சமத்துவத்தை தொடர்ந்து உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சகம் வாக்குறுதியளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் கல்வி பெறுவதை உறுதி செய்வதுடன் எந்த மாணவர்களும் அதில் பின்தங்கிடாமல் இருப்பதற்கு பல முயற்சிகள் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு