ஆசிரியர்கள் கொண்டிருக்கின்ற உயர்க்கல்வி தகுதிக்கு ஏற்ப, அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்த கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், உயர்நெறியும் ஆசிரியர் சேவை தரமும் கல்வி அமைச்சின் முக்கிய இலக்காக இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் இந்த கோரிக்கை ஏற்புடையதாக உள்ளது என்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில், நாட்டில் பொருளாதார நிலை மீட்சி கண்டவுடன், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வு ஏற்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் இது குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


