அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட டாமன்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் 98 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சிஐடி இயக்நனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
டோனி புவாவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
மலேசியாவில் ஆட்சியாளர்களின் அதிகாரம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதே; ஆட்சியாளர்களின் கட்டளைகள் மக்களின் அனைத்து வாழ்வியல் அம்சங்களையும் கட்டுப்படுத்தாது" என டோனி புவா பதிவிட்டிருந்தார்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா ருக்குன் நெகாராவின் முக்கியத்துவத்தை உணருமாறு சில அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தியதை அடுத்தே டோனி புவா இந்த விவாதத்திற்குரிய கருத்தை வெளியிட்டார்.








