May 22, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

Share:

கெந்திங்கிலிருந்து கோம்பாக் நோக்கி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில், மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யுஐஏ கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் காரில் 4 மாணவர்கள் இருந்ததாகவும், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோரியின் பின்புறத்தில் மோதியதாகவும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் முகமது நாசிர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில், கார் ஓட்டுநர் மற்றும் இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிர் தப்பிய மற்றொருவர் கடுமையாகக் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 4(1)-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

ஜோகூரில் மாணவியிடம் பாலியல் சீண்டல் உள்ளூர் ஆடவர் கைது

ஜோகூரில் மாணவியிடம் பாலியல் சீண்டல் உள்ளூர் ஆடவர் கைது