ஜார்ஜ் டவுன், ஜூலை 6-
பினாங்கு, ஜெலுடோங், ஜாலான் புக்கிட் டம்பார் என்ற இடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 4 வீடுகள் அழிந்தன. அதிகாலை 4.15 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த லேபு பாண்தாய் மற்றும் பாயா தெருபோங் ஆகிய நிலையங்களை சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைப்பதில் சுமார் ஒரு மணி போராட்டத்திற்கு பிறகு ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீ அருகில் உள்ள மற்ற வீடுகளில் பரவாமல் முழுமையாக தடுக்கப்பட்டது.. .
இதில் உயிருடன் சேதம் இல்லை என்ற போதிலும் அனைத்து வீடுகளும் 90 விழுக்காடு அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.








