May 26, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Share:

செத்தியு, நவ. 25-


திரெங்கானு, பண்டார் பெர்மைசூரியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் கோலத்திரெங்கானு – கோத்தாபாரு கூட்டரசு நெடுஞ்சாலையின் 53 ஆவது கிலோமீட்டரில் கம்போங் சுங்கை லெரேக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மூவர் பயணம் செய்த பெரோடுவா அக்ஸியா ரக கார், எதிரே வந்த 4 வீல் டிரைவ் பிக்காப் வாகனத்துடன் மோதியதில் மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் ஒருவர், செத்தியூ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

55 வயது கமருடீன் இப்ராஹிம், அவரின் மனைவி 54 வயது மைமூனா மாட் இசா மற்றும் பெண் பிள்ளையான 30 வயது நூர் ஆரிடியானா கமருடின் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக செத்தியூ போலீஸ் நிலையத் தலைவர் முகமட் ஸையின் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு