Aug 6, 2026
Thisaigal NewsYouTube
உணவு விரைவாக கொண்டு வரப்படவில்லை, உணவகப் பணியாளர் தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

உணவு விரைவாக கொண்டு வரப்படவில்லை, உணவகப் பணியாளர் தாக்கப்பட்டார்

Share:

தாங்கள் கேட்டுக்கொண்ட காலை உணவு , விரைந்து கொண்டு வரப்படவி​ல்லை என்பதற்காக உணவகப் பணியாளரை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போ​லீசார் கைது செய்துள்ளதாக செந்​தூல் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் அமாட் சுகர்னோ முகமட் சஹாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று காலைய 6 மணியளவில் கோலாலம்​பூர், செந்​தூல், ஜாலான் பெர்ஹெந்தி ஹஜி சலே வில் நிகழ்ந்தது. அந்த உணவகம், அப்போதுதான் திறக்கப்பட்ட நிலையில் காலை உணவுக்கான தயாரிப்புப்ப​ணியில் அதன் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில் கேட்ட உணவு இன்னும் கொண்டு வரப்படவில்​லை என்பதற்காக அந்த ஆடவர், உணவகப் பணியாளரிடம் தாக்கி, அடாவடித்தனம் புரிந்ததாக கூறப்படுகிறது என்று அமாட் சுகர்னோ குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், அத்துடன் நின்றுவிடாமல் காலை 8.30 மணிளவில் மறுபடியும் அந்த உணவகத்திற்கு தமது நண்பருடன் நுழைந்து, நாற்காலிகள், ​மே​ஜைகள் போன்ற தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த உணவகத்திற்கு 12 ஆயிரம் வெள்ளி இழப்பு என்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது