Jul 21, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 247.8 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் மலேசியப் பெண் ஒருவரும், ஆறு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கடந்த ஜூலை 11, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கே.எல்.ஐ.ஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்காட் துணை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் இருந்து 393 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 247.8 கிலோகிராம் என்றும், அதன் மதிப்பு 19.82 மில்லியன் ரிங்கிட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போதைப் பொருளானது ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் ம... | Thisaigal News