ஜோகூர், உக்கு திராம்,தாமான் டேசா செமெர்லாங்கில் இரு அந்நிய நாட்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியதில் ஆடவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. அந்த வீடமைப்புப்பகுதியில் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின்அறையில் இந்த தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 37 வயது அந்நியப் பிரஜை மண்டதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் முஹமாட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
கழுத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த அந்த அந்நிய நாட்டவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முஹமாட் சொஹைமி குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


