ஜோகூர், உக்கு திராம்,தாமான் டேசா செமெர்லாங்கில் இரு அந்நிய நாட்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியதில் ஆடவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. அந்த வீடமைப்புப்பகுதியில் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின்அறையில் இந்த தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 37 வயது அந்நியப் பிரஜை மண்டதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் முஹமாட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
கழுத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த அந்த அந்நிய நாட்டவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முஹமாட் சொஹைமி குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


