பினாங்கில் கடந்த வாரம் அறிமுகபடுத்தப்பட்ட புதிய மாடல் அமைப்பிலான ஃபெரி, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறையை வெகுவாக ஊக்குவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான தாய்லாந்தில் அமல்படுத்தப்பட்டதைப்போல அந்த ஃபெரி சேவை வாடகைக்கு விடப்படும் சூழலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஃபெரி சேவைகளின் பயணிகள் கொள்ளளவு, நடப்புத் தேவையைவிட போதுமான அளவிற்கு இருக்கிறது.
மூன்று ஃபெரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேளையில் மீதமுள்ள ஒரு ஃபெரி, சுற்றுலாவை ஊக்குவிக்க வாடகைக்கு விடமுடியும் என்று அந்தோணி லோக் கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


