May 26, 2026
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜைகளுக்கு விசா விலக்களிப்பு : குடிநுழைவுத்துறை வரவேற்பு
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜைகளுக்கு விசா விலக்களிப்பு : குடிநுழைவுத்துறை வரவேற்பு

Share:

கோலாலம்பூர், டிச. 21-


இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை மலேசியா, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்து இருப்பதை மலேசிய குடிநுழைவுத்துறை வரவேற்றது.

இதற்கு முன்பு இது போன்ற விசா விலக்களிப்பு வசதிகள், லிபராலிசி விசா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியிலிருந்து இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருப்பதையும் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியாக ஷாபான் தெரிவித்தார்.

இந்தியப்பிரஜைகளுக்கு இதுபோன்ற விசா விலக்களிப்பு சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது மூலம் நாட்டின் பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்தவொரு குத்தகமும் ஏற்படாமல் மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கம் வழங்கிய இந்த விசா விலக்களிப்பு சலுகை வாயிலாக இந்தியப் பிரஜைகள் விசாயின்றி 30 நாட்களுக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விலக்களிப்பு சலுகை வகை செய்வதாக வெளியுறவு அமைச்சு நேற்று விளக்கம் அளித்திருந்தது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு