Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.21-

நாட்டில் 2027-ஆம் கல்வியாண்டில் 6 வயதில் மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்னதாக அவர்களுக்கு ஒரு சிறப்புச் சோதனை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனையானது மாணவர்களைத் தரம் பிரிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணும் திறன் எந்த அளவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்த ஆரம்பக் கட்டச் சோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

குறிப்பாக, மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தச் சோதனை நடத்தப்படும். இந்தச் சோதனையில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் 6 வயதில் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் நேற்று அறிவிக்கப்பட்ட 2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வித் திட்டத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாக அடுத்த ஆண்டில் 6 வயது மாணவர்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

6 வயது மாணவர்கள் பள்ளிச் சூழலுக்குத் தயாராக இருப்பதை உறுதிச் செய்யவும், பாடத் திட்டத்தை அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்று ஃபாட்லீனா சீடேக் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன