Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் மீண்டும் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் மீண்டும் கைது செய்யப்பட்டார்

Share:

ஈப்போ, மே.19-

கடந்த வாரம் தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 போலீஸ்காரர்களின் மரணத்திற்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநர், இன்று திங்கட்கிழமை காலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல், கற்பழிப்பு போன்ற பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக கூறப்படும் 45 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், மாட்டைத் திருடியதாகக் குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாகக் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப்பட்ட அந்த லோரி ஓட்டுநரை ஜாமீனில் எடுப்பதற்கு யாரும் முன் வராததால் அவர் கடந்த மூன்று நாட்களாக பத்து காஜா போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இன்று 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகைச் செலுத்தப்பட்டு, அந்த லோரி ஓட்டுநரை அவரின் முதலாளி மீட்ட வேளையில், அடுத்த 20 நிமிடத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்