கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு தினங்களாக ஒன்பது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 37 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரையில் அளிக்கப்பட்டுள்ள புகார்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் அனைத்துலக பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளும் அடங்கும் என்று ஐஜிபி விளக்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்மாநிலத்தில் மொத்தம் 15 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து கோலாலம்பூரில் 6 புகார்களும், ஜோகூரில் 6 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்


