கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு தினங்களாக ஒன்பது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 37 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரையில் அளிக்கப்பட்டுள்ள புகார்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் அனைத்துலக பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளும் அடங்கும் என்று ஐஜிபி விளக்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அம்மாநிலத்தில் மொத்தம் 15 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து கோலாலம்பூரில் 6 புகார்களும், ஜோகூரில் 6 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


