May 6, 2026
Thisaigal NewsYouTube
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நெகாரா கட்டிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு
தற்போதைய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நெகாரா கட்டிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.16-

கடந்த 1957 ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட, நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்றான ஸ்ரீ நெகாராவின் மறுசீரமைப்புப் பணிகளை கஸானா நேஷனல் வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளது.

கஸானா-வின், டானா வாரிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்த மறுசீரமைப்புத் திட்ட பணிகளின் நிறைவையடுத்து, கட்டிடத்தின் திறப்பு விழா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது.

அரசாங்கம் இக்கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இறையாண்மை முதலீட்டு நிதியைப் பயன்படுத்தியதையடுத்து, மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கஸானா நிர்வாக இயக்குநர் அமிருல் ஃபெய்சால் வான் ஸாஹிர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீ நெகாராவின் மறுசீரமைப்பு என்பது கஸ்னாவிற்குக் கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்ட அமிருல் ஃபெய்சால், இதன் மூலம் தேசத்தை வடிவமைத்த கதைகளை உயிர்ப்பித்த உணர்வு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்