Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட்டில் இரண்டாவது முறையாக நில நடுக்கம், பொருட்சேதம் ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

சிகாமட்டில் இரண்டாவது முறையாக நில நடுக்கம், பொருட்சேதம் ஏற்படவில்லை

Share:

சிகாமட், ஆகஸ்ட்.27-

கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும், சிகாமட்டில் இரண்டாவது முறையாகவும் இன்று காலையில் ஏற்பட்ட மிதமான நில நடுக்கத்தில் எந்தவொரு பொருட்சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

மக்கள் சற்று அச்சத்தில் இருந்த போதிலும் எந்தவொரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்று சிகாமட் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் சிகாமட்டில் மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா மூலமாக பேரிடர் நிர்வாகக் குழு, நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

இன்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து சிகாமட்டிற்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் விரைந்துள்ளனர். சிகாமட் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதிச் செய்வர் என்று பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

சிகாமட்டில் இன்று காலை 8.59 மணியளவில் ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா அறிவித்திருந்தது.

Related News

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை