Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

10 வயது சிறுமியை மானபங்கம் படுத்தியதாக மாற்றுத் திறனாளி மீது குற்றச்சாட்டு

Share:

அம்பாங், பிப்.27-

கடந்த வாரம், சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் காலை நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த பத்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று மானபங்கம் புரிந்ததாக காணொளி ஒன்று வைரலான சம்பவத்தில் தொடர்புடைய மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் , இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

19 வயது முகமட் அடாம் ஹாய்கால் அப்துல்லா என்று மாற்றுத் திறனாளி இளைஞர், நீதிபதி நோர்ஷீலா கமாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின் தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என்பதற்கு அடையாளமாக அந்த இளைஞர் தலையை அசைத்ததுடன், குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.

அந்த இளைஞருக்கு எதிராக தீர்ப்பு வரும் மார்ச் 27 ஆம் தேதி அளிக்கப்படும் என்று அறிவித்த நீதிபதி நோர்ஷீலா கமாருடின், அதற்கு முன்னதாக அந்த இளைஞர் தொடர்புடைய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு சமூக நல இலாகாவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 6.20 மணியளவில் பள்ளி வாசலில் நடந்த இச்சம்பவத்தில் அந்த மாற்றுத் திறனாளி குற்றவாளி என்ற உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படும்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை