பத்து பாஹாட்,ஜன.10
ஜோகூர் மாநிலத்தின் ஒரு மருத்துவமனையின் உடற்கூறு மருத்துவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 33 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.
போதைப்பொருள் வழக்குகளில் சிறுநீர் பரிசோதனை முடிவை மாற்றி அமைப்பதில் அந்த மருத்துவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த 33 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புலன் விசாரணை முடியும் வரையில் அவர்களின் பணியிடம் மாற்றப்படும் என்று கமாருல் சாமான் குறிப்பிட்டார்.
இன்று ஜோகூர், ஶ்ரீ காடிங் போலீஸ் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கமாருல் சாமான் இதனை தெரிவித்தார்.








