மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிற்கு மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இன்று தலைமைத்துவ தத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கெளரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்ட மாமன்னர் சுல்தான் அப்துல்லா, இந்த உயரிய பட்டத்தை வழங்கியதற்காக அப்பல்கலைக்கழகத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இது தமது சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டும் அல்ல. மலேசிய மக்களின் அங்கீகாரமாகும் என்று மாமன்னர் தமது உரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் அரசமைப்பின் தலைவராக இருக்கும் பேரரசியார் துங்கு ஹஜா அஸீஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் கலந்து கொண்டார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


