மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிற்கு மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இன்று தலைமைத்துவ தத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கெளரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்ட மாமன்னர் சுல்தான் அப்துல்லா, இந்த உயரிய பட்டத்தை வழங்கியதற்காக அப்பல்கலைக்கழகத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இது தமது சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டும் அல்ல. மலேசிய மக்களின் அங்கீகாரமாகும் என்று மாமன்னர் தமது உரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் அரசமைப்பின் தலைவராக இருக்கும் பேரரசியார் துங்கு ஹஜா அஸீஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் கலந்து கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


