கோலாலம்பூர், மார்ச்.01-
மேற்காசிய நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் ஏற்படும் விமானத் தாமதங்கள் அல்லது ரத்துகள் குறித்து பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்குமாறு விமான நிறுவனங்களை மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் - CAAM கேட்டுக் கொண்டுள்ளது. மலேசிய விமானப் போக்குவரத்து பயனீட்டாளர் பாதுகாப்பு விதியின்படி, பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் முறையான வழிகாட்டுதல்களையும் வழங்குவதை நிறுவனங்கள் உறுதிச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் பயண விவரங்களைத் துல்லியமாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறும், ஏதேனும் புகார்கள் இருப்பின் முதலில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், பின்னர் தீர்வு கிடைக்காவிடில் ஆணையத்திடமும் முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








