நான்கு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை புத்ராஜெயா- கூட்டரசு நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்தத் தீர்ப்பு அவர் விடுதலையாவதை உறுதி செய்யுமா அல்லது ஏழு ஆண்டுகள் சிறை, பிரம்படி மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை மீண்டும் வழங்க வழிவகுக்குமா என்பதைத் தீர்மானிக்கும்
மேலும், 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஒரு மில்லியன் ரிங்கிட் வரையிலான நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கில், சட்ட விதிகளின்படி தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என அவரது தரப்பு வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








