குவாந்தான், ஆகஸ்ட்.01-
திரெங்கானு மாநிலம், Kuala Nerus பகுதியில் நடைபெற்ற RXZ Members 8.0 மோட்டார் சைக்கிள் பேரணிக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில், மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் இரவு Temerloh பகுதியில் LPT1 விரைவுச்சாலையில், 19 வயது இளைஞரான Muhammad Zulhairi Azhar Mohd Shahrizan ஓட்டிச் சென்ற Yamaha LC135 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்த போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Temerloh மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Nasyim Bahron தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நேற்று காலை Maran மாவட்டத்தில் நிகழ்ந்த மேலும் இரண்டு விபத்துகளில், 44 வயதான Mohd Fauzi Othman மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.
மற்றொரு விபத்தில், 34 வயதான Muhamad Fikri Jamallunasi ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் அவர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








