Aug 27, 2026
Thisaigal NewsYouTube
ஒதுக்கீட்டுப் பணத்தை திருப்பித் தர உத்தரவு! மறுபரிசீலனை செய்ய பக்காத்தான் ஹராப்பான் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

ஒதுக்கீட்டுப் பணத்தை திருப்பித் தர உத்தரவு! மறுபரிசீலனை செய்ய பக்காத்தான் ஹராப்பான் கோரிக்கை

Share:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்காக வழங்கப்பட்ட தொகுதி ஒதுக்கீட்டுப் பணத்தை திருப்பி அளிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அருள் குமார் கூறுகையில், இந்த நிதி பொதுமக்கள் நலனுக்காக பள்ளிகள், சங்கங்கள், ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள் மற்றும் கிராம வளர்ச்சி, பாதுகாப்புக் குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானின் 10 சட்டமன்ற உறுப்பினர்களும், லாபு மற்றும் பாரோய் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் தலா 1 லட்சத்து 74 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணம் மாதந்தோறும் அல்ல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகக் கூறிய அருள் குமார், செலவின அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயன்படுத்தப்படாத மீதிப் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related News

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

கே.எல்.ஐ.எ விமான சக்கரப் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர்  சடலம்! உடலில் காயங்கள் இல்லை

கே.எல்.ஐ.எ விமான சக்கரப் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம்! உடலில் காயங்கள் இல்லை