Aug 27, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.எ விமான சக்கரப் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர்  சடலம்! உடலில் காயங்கள் இல்லை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.எ விமான சக்கரப் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம்! உடலில் காயங்கள் இல்லை

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.எ டெர்மினல் 2-இல் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தின் சக்கரப் பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம், ஏற்கனவே அழுகத் தொடங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து காலை சுமார் 7 மணியளவில் தகவல் கிடைத்ததாக கே.எல்.ஐ.எ மாவட்ட போலீஸ் தலைவர் எம். ரவி கூறினார்.

விமானத்தின் வலது பக்க சக்கரத்தை உள்வாங்கும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முகம் கீழ்நோக்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததாக அவர் தெரிவித்தார்.

உடல் அமைப்பின் அடிப்படையில், உயிரிழந்தவர் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை.

அவர் வெள்ளை நிற ‘ஹூடி’, நீல நிற ஜீன்ஸ், பழுப்பு நிற தோல் பெல்ட் மற்றும் கருப்பு நிற விளையாட்டு காலணிகளை அணிந்திருந்தார். உடன் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று எம். ரவி தெரிவித்தார்.

Related News

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

சட்டவிரோத சுரங்கங்களுக்கு நாடு தழுவிய அதிரடி வேட்டை! 119 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் பறிமுதல் – 99 பேர் கைது

சட்டவிரோத சுரங்கங்களுக்கு நாடு தழுவிய அதிரடி வேட்டை! 119 மில்லியன் ரிங்கிட் சொத்துகள் பறிமுதல் – 99 பேர் கைது