Aug 27, 2026
Thisaigal NewsYouTube
நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 55 மலேசியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை நேபாள அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த தகவல் பயண முகவர்களிடமிருந்து கிடைத்ததாகவும், காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் பெயர்ப் பட்டியலைத் திரட்டி சரிபார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், காணாமல் போனோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேபாள பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முகமட் ஹசான் கூறினார்.

வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் அழிந்துள்ளதால் மீட்புப் பணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

டத்தோ டாக்டர் விஸ்வநாதனுக்கு டத்தோ விருது – சாதனைப் பயணத்திற்கு புதிய அங்கீகாரம்

டத்தோ டாக்டர் விஸ்வநாதனுக்கு டத்தோ விருது – சாதனைப் பயணத்திற்கு புதிய அங்கீகாரம்

5,000 மியான்மர் அகதிகள் கட்டம் கட்டமாக தாயகம் திரும்புகின்றனர்

5,000 மியான்மர் அகதிகள் கட்டம் கட்டமாக தாயகம் திரும்புகின்றனர்

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

டத்தோ ஸ்ரீ சரவணன் மீது நாளை ஊழல் குற்றச்சாட்டு; “என்னைச் சிக்க வைக்க சதி” என மறுப்பு!

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 10 மலேசியர்கள்! பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கலாம் என அச்சம்