கடந்த வாரம் தனது காதலியை கொலை செய்ததாக ஆடவர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 23 வயது சைனி எர்வென்டி சொபியான் சானி என்ற அந்த ஆடவர், கடந்த ஜுன் 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈப்போ, தாமான் சொங் சூன், பெர்சியாரான் ராபாட் என்ற இடத்தில் தமது காதலியான 24 வயது ஷவானி அப்துல்லா என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மாஜிஸ்திரேட் ஜெசிகா டைமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


