Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசு இலாகாவின் முன்னாள் துணை இயக்குநர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கு அரசு இலாகாவின் முன்னாள் துணை இயக்குநர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.07-

பினாங்கு மாநில அரசு இலாகாவின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. தாம் துணை இயக்குநரான பொறுப்பில் இருந்த போது, அரசாங்க குத்தகை ஒன்றை வழங்குவதற்கு குத்தகையாளர் ஒருவரிடமிருந்து 35 ஆயிரம் ரிங்கிட்டைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் அலுவலகம் கைது செய்துள்ளது.

50 வயது மதிக்க அந்த முன்னாள் துணை இயக்குநர், இன்று காலை 10 மணிக்கு பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட முன்னாள் அரசு அதிகாரி கைது செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு