சமூக ஊடகப் பிரபலமான நளினி கோதண்டபாணி, கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி உணவக ஊழியர் ஒருவரை, தாக்கிய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று அவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி அமிரா சரியாட்டி ஜைனல், அபராதத் தொகையை நளினி செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 41 வயதான நளினி, அந்த அபராத தொகையைச் செலுத்தினார்.
மூன்று குழந்தைகளின் தாயும், தகவல் தொழில்நுட்ப பொறியாளருமான அவர், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, மாலை 4 மணியளவில் செர்டாங் ராயா, செரி கெம்பாங்கான்னில் உள்ள ஒரு விரைவுணவகத்தில், 45 வயதான ராணி ஆறுமுகம்த்தை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.








