ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீராக பராமரிக்கவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும், மேற்கொள்ளப்படும் ஒப்ஸ் செலாமாட் 26 நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பேராக் மாநிலத்தில், விபத்து நடக்கும் அபாயம் உள்ள பகுதிகளாக, 48 ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளும், 29 ‘பிளாக் ஸ்பாட்’ பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 255 போலீஸ் அதிகாரிகளும், பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமானது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, சாலை விபத்துகளை குறைப்பது, வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்குவது ஆகும் என்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒப்ஸ் செலாமாட் 26 தொடக்க நிகழ்ச்சியில் கூறினார்.
மேலும், மார்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை போக்குவரத்தானது 30 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அடையாளம் காணப்பட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.








