Apr 6, 2026
Thisaigal NewsYouTube
மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளில் வருவாய் கசிவுகள் மூலம் மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட் தொகையானது, தற்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது, தொடர்ந்து மக்களுக்குத் அரசாங்க சலுகைகளை வழங்க உதவுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் இத்தொகை மீட்கப்பட்டதாகவும், அந்த தொகை தேவையுடைய மக்களிடம் திருப்பி வழங்கப்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் கைகளில் இருந்து கசிந்த அந்த தொகை எவ்வாறு மீட்கப்பட்டது என்பதை கிராமப்புற மக்களும், ஃபெல்டா குடியிருப்புகளில் வாழ்பவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உதவித் திட்டங்களுக்காக அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 6 பில்லியன் ரிங்கிட் செலவழித்து வருகிறது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்ந்து நீடித்தால், இச்செலவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அன்வார் எச்சரித்துள்ளார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்