Apr 6, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

Share:

கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த துயரச்சம்பவத்தில், ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், அச்சம்பவம் குறித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சு உள்விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்று துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில், அமைச்சு மற்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளும் என்றும் வோங் கா உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை நேற்று அவர் எஸ்.எம்.கே ராஜா பெர்மைசூரி பைனுன் பள்ளியில் நடைபெற்ற பள்ளி பேருந்து ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கிறிஸ்டோபர் லிங் ஜியா சியாங் மற்றும் 20 வயதுடைய ஜோயி லிங் லின் சியாங் ஆகிய இருவரும், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் பந்தாய் மெர்டேகா பகுதியில் படகோட்டத்தில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்