Apr 6, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்
தற்போதைய செய்திகள்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

Share:

கோத்தா பாரு சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தின் புறப்பாட்டு மண்டபத்தை சில தரப்பினர், “மட் ரெம்பிட்” எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தும் மைதானமாக மாற்றியுள்ளது மிகவும் அவமானகரமானது என போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் சாடியுள்ளார்.

இந்த செயல் மிகவும் கவலைக்குரியது மற்றும் வெட்கக்கேடானது என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான சதி செயல் நடவடிக்கையாகவும் பார்க்கப்படலாம் என்றும் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கிளந்தானில் சிறந்த விமான இணைப்பை உறுதிசெய்ய, மத்திய அரசு சுமார் 450 மில்லியன் ரிங்கிட் செலவில் விமான நிலையத்தை மேம்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் விரிவான மற்றும் பெரிய அளவிலான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில சாலை போக்குவரத்து துறை அமலாக்க இயக்குநருக்கு, லோக் சியூ ஃபூக் உத்தரவிட்டுள்ளார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்