Feb 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் உயிரியல் பூங்காவிற்கு அன்வார் குடும்பத்துடன் வருகை - இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் உயிரியல் பூங்காவிற்கு அன்வார் குடும்பத்துடன் வருகை - இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.02-

ஜோகூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது குடும்பத்தினருடனும், பேரக்குழந்தைகளுடனும் அங்கு வருகை புரிந்திருந்தார்.

நேற்று கோலாலம்பூரிலிருந்து மின்சார ரயில் சேவையான ETS மூலம் ஜோகூர் பாருவுக்கு வருகை புரிந்த அன்வார், தனது குடும்பத்தினருடன் மலேசியாவின் பழமையான மிருகக்காட்சிசாலையில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

இது தனது அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட பயணம் என செய்தியாளர்களிடம் விவரித்த அவர், அங்கிருந்த பார்வையாளர்கள் பலர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

இந்நிலையில், அன்வாரின் இந்த வருகையானது, ஜோகூர் மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டு சுற்றுலாவிற்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அம்மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை தலைவர் டத்தோ முஹமட் ஜாஃப்னி முஹமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 மாதங்களில், ஜோகூர் உயிரியல் பூங்காவானது 1.2 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்ததோடு, கடந்த ஆண்டு மட்டும் 5.5 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் முஹமட் ஜாஃப்னி குறிப்பிட்டுள்ளார்.

Related News

72 வயது பினாங்கு மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட் - டோட்டோவில் 40 மில்லியன் ரிங்கிட் வென்றார்

72 வயது பினாங்கு மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட் - டோட்டோவில் 40 மில்லியன் ரிங்கிட் வென்றார்

கோத்தா பாரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 77 டன்கள் மெண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் அழிந்தன

கோத்தா பாரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 77 டன்கள் மெண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் அழிந்தன

சர்ச்சைக்குரிய நீர் இசை விழா மலேசிய கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப திட்டமிட்டபடி நடக்கும் - ஸாஹிட் உறுதி

சர்ச்சைக்குரிய நீர் இசை விழா மலேசிய கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப திட்டமிட்டபடி நடக்கும் - ஸாஹிட் உறுதி

"தொலைப்பேசி மோசடியில் சிக்க வேண்டாம்" -  வாடிக்கையாளர்களுக்கு டிஎன்பி நிறுவனம் எச்சரிக்கை

"தொலைப்பேசி மோசடியில் சிக்க வேண்டாம்" - வாடிக்கையாளர்களுக்கு டிஎன்பி நிறுவனம் எச்சரிக்கை

பத்துமலை தைப்பூசத்தில் வியாபாரிகளுடன் தகராறு - இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் கைது

பத்துமலை தைப்பூசத்தில் வியாபாரிகளுடன் தகராறு - இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் கைது

மலேசிய சுற்றுலா ஆண்டு 2026: சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்களில் மாற்றம்

மலேசிய சுற்றுலா ஆண்டு 2026: சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்களில் மாற்றம்