கோலாலம்பூர், டிச. 26-
காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் செம்பனை எண்ணெய்யை ஏற்றிவந்த கொள்கலன் லோரி ஒன்று தடம்புரண்டு, விபத்துக்குள்ளான சம்பவத்தில் சாலையில் கசிந்த எண்ணெய்யை அகற்றி, சுத்தம் செய்யும் பணி இன்று மாலையில் நிறைவுப்பெற்றதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
சாலையில் மிகத் தடிப்பாக உறைந்து கிடந்த செம்பனை எண்ணெய்யை அகற்றும் பணி, சிலாங்கூர் நீர் வாரியமான ஆயர் சிலாங்கூர் மற்றும் இண்டா வாட்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய்யை உறிஞ்சு எடுப்பதற்கு இண்டா வாட்டர் நிறுவனத்தின் நான்கு லோரிகள் பயன்படுத்தப்பட்டதையும், கிட்டத்தட்ட 20 டன் எண்ணெய் அகற்றப்பட்டதையும் அவர் விளக்கினார்.








