May 28, 2026
Thisaigal NewsYouTube
புதிய பள்ளிவாசலைக் கட்டுங்கள்: ஆலயத்தையும் நிலைநிறுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

புதிய பள்ளிவாசலைக் கட்டுங்கள்: ஆலயத்தையும் நிலைநிறுத்துங்கள்

Share:

ஷா ஆலாம், மார்ச்.25-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் கோவில் விவகாரத்தில் பள்ளிவாசலைக் கட்டும் அதே வேளையில் அந்த ஆலயத்தையும் அங்கேயே நிலை நிறுத்தங்கள் என்று சட்ட வல்லுநரும், பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யுமான ஹாசான் அப்துல் காரிம் ஆலோசனைக் கூறினார்.

இரண்டு வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் நமது சமய நல்லிணக்கத்தின் அடையாளமாாக இதனை நாம் செய்தாக வேண்டும் என்று அந்த பிகேஆர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வீற்றிருக்கும் ஆலயம் இடிக்கப்படாமல் அங்கேயே நிலைநிறுத்தப்பட வேண்டும். அதே வேளையில் அருகில் உள்ள நிலத்தில் பள்ளிவாசலை நிர்மாணிக்கலாம் என்று அந்த மூத்த எம்.பி. பரிந்துரை செய்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் அதிகாரத்துவ சமயமாக இருந்தாலும் இந்த நாட்டில் உள்ள மற்ற மதத்தினரும் தங்கள் சமயத்தைப் பின்பற்றுவதற்கு சுதந்திரம் அளித்துள்ளது.

மற்ற சமயங்களையும் குறிப்பாக இந்த நாட்டில் உள்ள இந்து சமயத்தினரையும் நாம் மதித்து போற்றும் வகையில் நமது சிறப்பை உணர்த்த வேண்டும். அந்த ஆலயத்தை உடைக்காமல் அங்கேயே நிலை நிறுத்தலாம். ஜாகேல் நிறுவனம் விரும்பியதைப் போலவே அங்கே பள்ளிவாசலைக் கட்டலாம் என்று ஹாசான் அப்துல் காரிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது