Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஏழு பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

ஏழு பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்

Share:

Kajang - கில் உள்ள ஒரு பேரங்காடியில் 3.2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் 7 பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அந்த கொள்ளை சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று Selangor போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan கூறினார்.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் சம்பந்தப்பட்ட பேரங்காடியின் நகைக்கடை ஒன்றில் நான்கு முகமூடி திருடர்கள் நுழைந்து சுத்தியலை பயன்படுத்தி கண்ணாடிகளை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக Hussein Omar தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அந்த முகமூடி கொள்ளையர்கள் கைத்துப்பாக்கிகளையும் rifle barrel துப்பாக்கிகளுடனும் சம்பந்தப்பட்ட நகைக்கடையினுள் நுழைந்திருப்பது CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தாக அவர் விவரித்தார்.

Related News