தென் சீனா கடல் தொடர்பாக மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நீடித்து வரும் சர்ச்சையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு இரு நாடுகளும் இன்று இணக்கம் கண்டுள்ளன.
ஐ.நா.வின் 1982 ஆம் ஆண்டு மாநாட்டு ஒப்பந்தம் உட்பட உலகளாவிய நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக சட்டத்திற்கு ஏற்ப பேச்சுவார்த்தையின் மூலம் இந்த சர்ச்சையை தீர்த்துக்கொள்தற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
தென்சீனா கடல் தொடர்பில் கடல்சார் சர்ச்சையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது மூலம் அந்த கடல் பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று மலேசியாவும், சீனாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.








