Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பண்டிகைக் காலங்களில் விமான டிக்கெட்களுக்கு உதவித் தொகை தொடரப்படும்

Share:

சிப்பாங், பிப்.26-

இவ்வாண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தில் ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட்டுக்கு விதிக்கப்படும் உதவித் தொகைக்கான உச்சவரம்பு கட்டணமான 499 ரிங்கிட்டை அரசாங்கம் தொடர்ந்து வழங்கவுள்ளது.

இது தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் இடையே பயணிக்கும் பயணிகள் குறிப்பாக, மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அனைத்து மலேசியர்களுக்கும் விமானப் பயண டிக்கெட் மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அசல் டிக்கெட் விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்திற்கான தொகையை அரசாங்கம் ஏற்கும் என்று அந்தோணி லோக் விவரித்தார்.

”இது நிச்சயமாக ஒரு நல்ல திட்டமாகும். இதை நாங்கள் வரவேற்கிறோம். பண்டிகைக் காலத்தைக் கொண்டாட, குறிப்பாக நோன்பு பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் சுமையைக் குறைக்க ஏர் ஆசியாவின் கூடுதல் முயற்சி இதுவாகும் என்றார் அவர்.

விமானப் போக்குவரத்துத் துறையினர் உடனான இந்த ஒத்துழைப்பு, மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக லோக் கூறினார்.

சிலாங்கூர், சிப்பாங் ஏர் ஆசியா அலுவகத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நிலையான கட்டண விகித அறிவிப்பு நிகழ்ச்சியில் அந்தோணி லோக் உரையாற்றினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு