May 26, 2026
Thisaigal NewsYouTube
இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்கு நாடகமாடி நபர் கைது
தற்போதைய செய்திகள்

இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்கு நாடகமாடி நபர் கைது

Share:

ரெம்பாவ், டிச. 23-


இன்சுரன்ஸ் பணத்தை இழப்பீடாக கோருவதற்காக தனது விலை உயர்ந்த ஆடம்பரக் கார், கொள்ளைச் சம்பவத்தின் போது களவாடப்பட்டு விட்டதாக பொய்யான தகவலைகூறி, நாடகமாடிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் அளித்த போலீஸ் புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை சந்தேகித்த போலீசார், அந்த நபரை துருவி, துருவி விசாரணை செய்த போது,அவர் அளித்த தகவல்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 42 வயதுடைய அந்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஷேக் கடார் ஷேக் முகமட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.22 மணியளவில் தம்மை மடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், தம்முடைய உடமைகளையும், தமக்கு சொந்தான ஆவ்டி ரக காரையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக அந்த நபர், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.14 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்காக அவர் இந்த பித்தலாட்டத்தை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷேக் கடார் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு